LOADING...

இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளாரா? அவரே சொன்ன பதில்

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவர் மீண்டும் திரும்புவாரா என்ற ஊகங்களுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சதம் (135 ரன்கள்) இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது.

உலக சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா: ஒருநாள் போட்டிகளில் அஃப்ரிடியின் சிக்சர் சாதனை முறியடிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனைய முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனை நாயகன் விராட் கோலி: 52வது சதம் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

INDvsSA முதல் ஒருநாள் போட்டி: ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதை உறுதி செய்தார்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தொடங்கவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தனது பேட்டிங் நிலை குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை

தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 32 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார்.

INDvsSA முதல் டெஸ்ட்: 17 ஆண்டுகளில் முதல் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனை படைத்துள்ளார்.

முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான்.

ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி

ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவி 2025 மாடல் பரிசளிப்பு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைப் படைத்து வெற்றியீட்டியதைக் கொண்டாடும் விதமாக, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra SUV) காரின் முதல் யூனிட்களை அணிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

NAMO 1: மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு ஜெர்சியை பரிசளித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 5 அன்று புது டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்றார்.

06 Nov 2025
ஐசிசி

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.

வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்

நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார்.

கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.

நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான்; ஆசிய கிரிக்கெட் ரைசிங் ஸ்டார்ஸ் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு 

ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ODI ரன்கள்; மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஒருநாள் ரன்களைக் கடந்து குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்தார்.

இரண்டு மாதங்கள் ஓய்வு கட்டாயம்; தென்னாப்பிரிக்கா தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு விளையாடாமல் ஓய்வில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

BCCI-யின் துரித நடவடிக்கையால் ஷ்ரேயாஸ் ஐயர் உயிர் காப்பாற்றப்பட்டது: தகவல்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்து, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு

வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றம்; சிட்னி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த சாதகமான செய்தியாக, சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இருந்து அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

27 Oct 2025
பிசிசிஐ

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் இதுதான்; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

விலா எலும்பு காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

தொடக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவாக்கின் நீண்ட கால சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சனிக்கிழமை (அக்டோபர் 25) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டினார்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் அக்டோபர் 30 அன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதல்

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

மாஸ்டர் கிளாஸ் ஆட்டம்: ரோஹித், கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியாவுக்கு வெற்றி; ஒயிட்வாஷ் அவமானம் தவிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரியாவிடைப் பரிசாக, மூத்த ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலக்கைத் துரத்துவதில் ஒரு மாஸ்டர் கிளாஸ் செயல்திறனை வெளிப்படுத்தினர்.

ஆசிய கோப்பையைத் திரும்ப ஒப்படைக்க பிசிசிஐ கோரிக்கை; தராவிட்டால் ஐசிசியிடம் முறையிட நடவடிக்கை

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) நடந்து வரும் சர்ச்சையைத் தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிய கோப்பை 2025 கோப்பையை இந்தியாவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கதேசத்தின் தோல்வியால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிப்பு

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், வங்கதேச கிரிக்கெட் அணியின் அரையிறுதி கனவு திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நவி மும்பையில் முடிவுக்கு வந்தது.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதில் சிக்கல்

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்திய கிரிக்கெட் அணி தனது நான்காவது தொடர் தோல்வியை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இங்கிலாந்திடம் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது.

INDvsAUS முதல் ODI: மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மழை குறுக்கீட்டால் ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தித் தொடரில் முன்னிலை பெற்றது.

எம்எஸ் தோனியை விஞ்சி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக விளையாடிய இளம் வீரராக ஷுப்மன் கில் சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணிக்கு முக்கியத் தலைமை மாற்றம் ஏற்பட்டது.

INDvsAUS முதல் ODI: ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆன விராட் கோலி

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த மறுபிரவேசம் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது இந்திய வீரர்; ரோஹித் ஷர்மா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுக போட்டியில் சதமடித்த ஒரே இந்தியர்; சாதனையை சமன் செய்வாரா ஷுப்மன் கில்?

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு புதிய சகாப்தம் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்திய அணி

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டியை நடத்தும் நாடான இந்தியா, தற்போதைய நிலையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதில் ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.

விட்டுக்கொடுக்க முடிவு செய்யும்போதுதான் தோல்வி அடைகிறீர்கள்; விராட் கோலியின் மர்ம எக்ஸ் பதிவால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக அங்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே, மூத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட மர்மமான பதிவு அவரது நீண்ட கால ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம், குறிப்பாக 2027 உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பு குறித்து பெரும் ஊகங்களைத் தூண்டியுள்ளது.

டெஸ்டில் அதிக ஸ்கோர்; வங்கதேசத்தின் 7 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி ஒரு சாதனை படைத்த முதல் இன்னிங்ஸ் மொத்த ஸ்கோருடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்; கேப்டன் ஷுப்மன் கில் சாதனை

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு, புதுடெல்லியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளார்.

24 வயதிற்குள் 5 ஆவது 150+ டெஸ்ட் சதம்: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து, கிரிக்கெட்டில் தனது அபாரமான எழுச்சியைத் தொடர்கிறார்.

ஒருநாள் அணி தேர்வில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி கையாளப்பட்ட விதம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அணி நிர்வாகம் கையாண்ட விதம் குறித்து, முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரிஸ்பேனில் இருந்து அதிகாலையில் ராஜஸ்தான் ராயல் அதிகாரியை அழைத்த வைபவ் சூர்யவன்ஷி; இதான் காரணமா?

ஒரு நகைச்சுவையான சம்பவத்தில், 14 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 5 மணிக்கு பிரிஸ்பேனில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸின் உயர் செயல்திறன் இயக்குனர் ஜூபின் பருச்சாவை அழைத்தார்.

மைதான அரங்குக்கு பெயர்; இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம் சேர்த்தது ஆந்திர கிரிக்கெட் சங்கம்

ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அரங்கங்களுக்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான மிதாலி ராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்துள்ளது.